தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். அவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சக்கைப்போடு போட்டது. அதனால் தமிழில் தனக்கென ஒரு இடம் இருக்கும் என சந்தோசப்பட்டார். ஆனால் அவரே அதை க் கெடுத்துக்கொண்டார். மலையாளத்தில் வரனே அவஷ்யமுண்டு என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தில் ஒரு நாய்க்குப் பிரபாகரன் எனப்பெயர் வைத்திருந்தனர். இதனால் தமிழர்கள் கொந்தளித்தனர். அந்தப்படம் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தில் துல்கரும் சிக்கினார். நிச்சயமாக துல்கர் நினைத்திருந்தால் அப்படியொரு பெயரை நாய்க்கு வைக்க வேண்டாம் எனத்தடுத்திருக்கலாம். ஏனோ அவர் செய்யவில்லை. அந்தக் காரணமா என்னவென்று தெரியவில்லை. இப்போது கோடியக்கரை என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் ஒரு நாய்க்குப் பெயர் துல்கர் என வைத்துள்ளனர். இந்தக் கோடியக்கரைப் படத்தை பாயின்ட் காலிமர் பிலிம்ஸின் ருத்ரம் புரொடக்சன்ஸ் வழங்குகிறது. செளத்ரி மற்றும் ஷங்கர் இயக்கியுள்ளனர். பாலா முராரி குமார் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Related posts
-
”இது மாறுதலுக்கான நேரம்” – நாற்கரப்போர் இயக்குநர் ஸ்ரீவெற்றி
ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பட ரிலீஸுக்கான... -
ஜூன் 27ல் வெளியாகும் கல்கி 2898 AD
பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !... -
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ”ராபர்” படத்தின் பர்ஸ்ட் லுக்
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்...